தெரு முனை பிரச்சாரம் மூலமாக நம் சமுதாயத்தில் நடக்கும் மார்கத்திற்கு புறம்பான செயல்கள் மற்றும் மார்க்கத்தை மறந்தவர்களாக தான் தோன்றி தனமாக செயல் படும் சில முஸ்லிம்கள் தன்னை ஒரு நிமிடம் சிந்திக்க வைக்க நபி வழி இல் அறிவுரை, இணை வைக்கும் செயல் பாடுகளிலிருந்து முற்றிலும் தன்னை திருத்திக்கொள்ள, அல்லா ஒருவனை மட்டும் அஞ்சி வாழக்கூடிய உண்மையான முஸ்லிம்களாக தன்னை மாற்றிக்கொள்ள சிறந்த தாகிகளை வைத்து தெரு முனை பிரசாரம் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கிறது . உள்ளூர் கேபிள் டி வீ (ஜி பிளுஸ்) மூலமாக வாரம் இரு முறை கேள்வி பதில் மற்றும் மார்க்க சம்மந்தமாக பயான் இவைகள் ஒலி பரப்பப்பட்டு வருகிறது, மக்கள் அனைவரும் பயனடைந்து வருகிறார்கள்.