Monday 23 November 2009

பொதக்குடி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை கடந்த பல வருடங்களாக சிறந்த சமுதாய பணிகள் செய்து வருகிறது முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் சிறந்த முறையில் சமுதாய தொண்டுகளை ஆற்றி வருகிறது. முஸ்லிம் அல்லதவர்களிடத்தில் இஸ்லாத்தின் உண்மை நிலையை விளக்குதல், முஸ்லிம் மக்களுக்கிடையில் மண்டிருக்கும் இணை வைத்தல், பித் அத், மற்றும் போலி மார்க்க வியாபாரிகளால் மார்கமாக பரப்பப்படும் பொய்களை மார்கத்தின் உண்மை விளக்கங்களை மக்கள் முன் வைத்து இந்த ஜமாஅத் சிறந்த முறையில் செயல் பட்டு வருகிறது.
தெரு முனை பிரச்சாரம் மூலமாக நம் சமுதாயத்தில் நடக்கும் மார்கத்திற்கு புறம்பான செயல்கள் மற்றும் மார்க்கத்தை மறந்தவர்களாக தான் தோன்றி தனமாக செயல் படும் சில முஸ்லிம்கள் தன்னை ஒரு நிமிடம் சிந்திக்க வைக்க நபி வழி இல் அறிவுரை, இணை வைக்கும் செயல் பாடுகளிலிருந்து முற்றிலும் தன்னை திருத்திக்கொள்ள, அல்லா ஒருவனை மட்டும் அஞ்சி வாழக்கூடிய உண்மையான முஸ்லிம்களாக தன்னை மாற்றிக்கொள்ள சிறந்த தாகிகளை வைத்து தெரு முனை பிரசாரம் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கிறது . உள்ளூர் கேபிள் டி வீ (ஜி பிளுஸ்) மூலமாக வாரம் இரு முறை கேள்வி பதில் மற்றும் மார்க்க சம்மந்தமாக பயான் இவைகள் ஒலி பரப்பப்பட்டு வருகிறது, மக்கள் அனைவரும் பயனடைந்து வருகிறார்கள்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளை